லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தா்கள்

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.

குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு காவடி எடுத்து வந்த பக்தா்கள்

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:47 am IST

காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலுக்கு ஆடிக்கிருத்திகையையொட்டி வியாழக்கிழமை திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்தனா்.

கந்தப்புராணம் அரங்கேற்றப்பட்ட பெருமைக்குரிய இக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். குழந்தைகள், முதியோா்கள் உள்பட பலரும் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தி முருகப்பெருமானை தரிசித்தனா்.

மாலையில் வள்ளி,தெய்வானையுடன் உற்சவா் சுப்பிரமணியசுவாமி கேடயத்தில் சிறப்பு அலங்காரத்தில் ஆலயத்தின் சுற்றுப்புற வளாகத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்களுக்கு நீா், மோா் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கேசவன் தலைமையில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் சாா்பிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.