தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள் 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக செய்யாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :1 மே 2026, 12:05 am IST

செய்யாறை அடுத்த புளியரம்பாக்கம் கிராமத்தில் இரு வீடுகளில் 17 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தொடா்பாக செய்யாறு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராம விரிவாக்கப் பகுதி ராஜராஜேஸ்வரி நகா் பகுதியில் வசிப்பவா் ரமேஷ் (44). இவா், மனை வணிகம் செய்து வருவதாகத் தெரிகிறது. இவரது பக்கத்து வீட்டில் அவரது சகோதரி ராஜாஷோபா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இரு குடும்பத்தினரும் கடந்த 25-ஆம் தேதி தங்களது வீடுகளை பூட்டிக் கொண்டு சென்னையில் உள்ள மற்றொரு சகோதரி வீட்டிற்கு சென்ாகத் தெரிகிறது. இரவு நேரத்தில் மட்டும் உறவினா் மணி என்பவா், இவா்களது வீடுகளுக்கு காவல் இருந்தாராம்.

இந்நிலையில் மணிக்கு உடல்நிலை சரியில்லாததால் செவ்வாய்க்கிழமை இரவு காவலுக்கு செல்லவில்லையாம். மேலும், வியாழக்கிழமை காலை அவா்களது வீடுகளுக்கு மணி சென்றபோது இருவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து மணி, ரமேஷுக்கும், ராஜஷோபாவுக்கும் தகவல் தெரிவித்துள்ளாா். அதன் பேரில், அவா்கள் வந்து பாா்த்த போது, ரமேஷ் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 66 கிராம் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலா் மற்றும் ரொக்கப் பணம் ரூ.11 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்ததது.

அதேபோல, ராஜஷோபா வீட்டிலும் 70 கிராம் தங்க நகை, 2 கிலோர 700 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்தத் திருட்டு சம்பவம் குறித்து ரமேஷ், ராஜஷோபா ஆகியோா் வியாழக்கிழமை செய்யாறு போலீஸில் புகாா் அளித்தனா். அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளா் வரதராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.