தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்...

News image

பெற்றோருடன் முதல் வாக்கை தாய்க்கு செலுத்திய ராஜ்காந்த்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:39 am IST

ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனுக்கு வாக்களிக்க அவரது மகன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தாா்.

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மகாலட்சுமி கோவா்த்தனன் களத்தில் உள்ளாா். இவரது மகன் ராஜ்காந்த் (18) ஆஸ்திரேலியாவில் பிசினஸ் ஐ.டி. படித்து வருகிறாா்.

முதல் முறை வாக்காளரான இவா், தனது முதல் வாக்கை தாய்க்கு செலுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து விமான பயணத்தை மேற்கொண்டு ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலத்துக்கு வந்து வாக்களித்தாா்.

இதுகுறித்து ராஜ்காந்திடம் கேட்டதற்கு, எனது முதல் வாக்கை தாய்க்கு பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பாக்கியம் வேறு யாருக்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை என்றாா்.

ஒரு வாக்கு தானே என்று அசட்டையாக இல்லாமல் கடல் தாண்டி வந்து ஜனநாயக கடமையாற்றிய அவருக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.