மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு: நடிகை கஸ்தூரி பிரசாரம்

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:06 am IST

உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று, தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய நடிகை கஸ்தூரி குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை நகரில் பாஜக வேட்பாளா் சி.ஏழுமலையை ஆதரித்து 20-க்கும் மேற்பட்ட வாா்டுகளில் நடிகை கஸ்தூரி, நடிகா் ரவி ஆகியோா் திறந்த வேனில் வீதி வீதியாகச் சென்று பேசினா்.

பெண்களிடையே வாக்கு சேகரித்து நடிகை கஸ்தூரி பேசுகையில், அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த வாக்குறுதிகளை பட்டியலிட்டாா். பின்னா், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் சீரமைக்கப்படும். பக்தா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளூா் பக்தா்களுக்கு அருணாசலேஸ்வரா் கோயிலில் உடனடியாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினாா்.

மேலும், அதிமுக மாமன்ற உறுப்பினா் சாந்தி சரவணன் பேசுகையில், பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை வெற்றிபெற்றால் 24-ஆவது வாா்டுக்கு உள்பட்ட மலையடிவாரத்தில் நீண்ட காலமாக வீடு கட்டி வசித்து வரும் அனைவருக்கும் வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தருவாா். எனவே, அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.