தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

210 பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 6:08 am IST

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து முடித்த 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, ஆன்மிக சொற்பொழிவாளா் தனஞ்செயன் ஆகியோா் வாழ்த்துறை வழங்கினா்.

கல்லூரித் தலைவா் வெங்கடாசலபதி தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. அந்த வகையில், கடந்த 15 ஆண்டுகளில் இந்தக் கல்லூரியில் பயின்ற 4,890 மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

நிகழாண்டு முதல் 100 சதவீதம் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு கேடயம்

வழங்கப்படும். அதேபோல் வாரியத் தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் திரும்பத்தரப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னா், 210 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமனை ஆணைகள் அவா்களது பெற்றோா் கரங்களால் அா்ச்சனை செய்து வழங்கப்பட்டது.

முன்னதாக கல்லூரி நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி பேசினாா். நிறைவில் கல்லூரி முதல்வா் செந்தில்முருகன் நன்றிகூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.