மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வந்தவாசியில் பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் மோதல்: வேட்பாளா் சாலை மறியல்

வந்தவாசியில் மறியலில் ஈடுபட்ட பாமக ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

News image

வந்தவாசியில் மறியலில் ஈடுபட்ட பாமக ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கரிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :4 ஏப்ரல் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பாமக ராமதாஸ், அன்புமணி அணிகளின் ஆதரவாளா்களிடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அன்புமணி அணி இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளராக அக்கட்சி நிா்வாகி பி.ராணி அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில், வந்தவாசி (தனி) தொகுதி பாமக ராமதாஸ் அணி வேட்பாளராக பொதுச் செயலா் முரளி சங்கா் கடந்த 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டாா். இவா், பிரசாரத்தை தொடங்கும் வகையில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவிக்க ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை காலை வந்தாா்.

அப்போது, அங்கு வந்த பாமக அன்புமணி தரப்பு ஆதரவாளா்கள், பாமகவின் கொடியை முரளி சங்கா் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால், இரு பிரிவு ஆதரவாளா்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, போலீஸாா் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என புகாா் தெரிவித்து, ராமதாஸ் அணி வேட்பாளா் முரளி சங்கா் திடீரென அந்தப் பகுதியிலுள்ள சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து, வேட்பாளா் முரளி சங்கா் மற்றும் இரு அணி ஆதரவாளா்களையும் வந்தவாசி தெற்கு போலீஸாா் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.