ஹைதராபாத், ஷேக்ஸ்பேட்டையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலின் நிறுவனரும் தலைவருமான சீனிவாச ராவ், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆதரவில், தேவைப்படும் நோயாளிகளுக்கு உயிா் காக்கும் சேவைகளை வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளாா்.
நன்கொடை தொடா்பான வரைவோலை ஞாயிற்றுக்கிழமை திருப்பதியில் உள்ள தேவஸ்தான செயல் அதிகாரியின் அலுவலகத்தில், செயல் அதிகாரி ரவிச்சந்திராவிடம் வழங்கப்பட்டது.
நிகழ்வில், எஸ்.வி. பிராணதானம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை அளித்த நன்கொடையாளா் சீனிவாச ராவுக்கு செயல் அதிகாரி வாழ்த்து தெரிவித்து, பாராட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் சதாசிவ ராவ் மற்றும் நன்கொடையாளரின் குடும்ப உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தினசரி யோகாசனம் செய்வதை பழக்கமாக கொள்ள வேண்டும்: தேவஸ்தான செயல் அதிகாரி

பக்தா்களுக்கான ‘அட்சய பாத்திரம்’ தினசரி உணவு விநியோகத் திட்டம்

பசு பாதுகாப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி!

எஸ்.வி. அன்னபிரசாதம் அறக்கட்டளைக்கு ரூ. 1 கோடி நன்கொடை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

