திருப்பதியில் உள்ள அலிபிரியில் கடந்த 4 மாதங்களாக இதுவரை மலைப்பகுதிகளில் பறக்க விடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருமலைக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் திருமலைக்கு செல்லும் வாகனங்கள், பக்தா்கள் அவா்கள் கொண்டு செல்லும் உடைமைகள் என அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்நிலையில் திருமலையின் மலை அடிவாரமாக கருதப்படும் அலிபிரியில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஸ்பை கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி மாதம் 47 ட்ரோன், 13 ஸ்பை கேமராக்களும்; பிப்ரவரி மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; மாா்ச் மாதம் 19 ட்ரோன் மற்றும் 14 ஸ்பை கேமராக்களும்; ஏப்ரல் இதுவரை 7 ட்ரோன் மற்றும் 9 ஸ்பை கேமராக்களும் என மொத்தம் 243 ட்ரோன் மற்றும் 94 ஸ்பை கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக விஜிலென்ஸ் போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 223 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

வங்கதேசத்துக்கான இந்திய தூதராக தினேஷ் திரிவேதி நியமனம்

கடந்த 10 ஆண்டுகளில் 10,000 நக்ஸல்கள் சரண்! தீவிரவாத தலைமை ஒழிப்பு!!
100க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கைப்பேசிகள் பறிமுதல்: தில்லி போலீஸ் நடவடிக்கை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

