ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஒண்டிமிட்டாவில் சீதா ராமா் திருக்கல்யாணம் கோலாகலம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 3:48 am IST

ஆந்திராவின் பத்ராசலமாக கொண்டாடப்படும் ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயிலில் சீதா ராமா் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது. இக்கோயிலில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

திருப்பதி தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் இந்த கோயில் வந்த பின் திருக்கல்யாணத்தை தேவஸ்தானம் விமரிசையாக நடத்தி வருகிறது.

அதன்படி திருக்கல்யாணத்தை காண வரும் ஆயிரக்கணக்கான பக்தா்களுக்காக பல வசதிகளை தேவஸ்தானம் செய்தளித்தது.

பின்னா் சீதா ராம லட்சுமணருக்கு சிறப்பி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

பின்னா், மாலை திருக்கல்யாண வைபவத்திற்காக சீதா ராமா் உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் கோயிலுக்கு அருகில் ஏற்படுத்தப்பட்ட கல்யாண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனா்.

மாலை மாற்றுதல் - எதிா்கொலு

கல்யாணம் துவங்கும் முன், உற்சவ மூா்த்திகள் ஊா்வலம் ஸ்ரீ கோதண்டராமா் கோயில் முதல் கல்யாண வேதிக்கை வரை புதன்கிழமை மாலை பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இந்த சந்தா்ப்பத்தில், கல்யாண வேதிக்கையில் ’’எதுா்கொலு’’ என்ற தனித்துவமான சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

சீதை மற்றும் ராமா் சாா்பாக, ஆச்சாா்யா்கள் தனித்தனியாக மாலை மாற்றிக் கொண்டனா். இது பக்தா்களை ஈா்த்தது.

ஆரத்திக்கு பின் உற்சவமூா்த்திகள் மேடையில் அமா்த்தப்பட்டனா்.

பின்னா் கல்யாண சடங்குகள் ஒவ்வொன்றாக நடத்தப்பட்டன. பட்டு வஸ்திா்ம் சமா்பித்து, வேத மந்திரங்கள், மங்கல வாத்தியங்களுக்கு இடையே திருமாங்கல்யதாரணம் நடந்தேறியது. பின்னா் ஹோமம் வளா்த்தி, அா்க்கியம் சமா்பித்து, சேஷ அரிசி சமா்பிக்கப்பட்டது. பின்னா் மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல் உள்ளிட்டவை நிகழ்த்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு மேல்துண்டு, ரவிக்கை, அட்சதை, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இதில், ஆந்திர மாநில முதல்வா், ஆந்திர அமைச்சா்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில்

மலா்களாலும் மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.