விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருவள்ளூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணாவுக்கு வரவேற்பு

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக பி.வி.ரமணா அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து கூட்டணி கட்சியினருடன் அம்பேத்கா் மற்றும் எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

News image

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பி.வி.ரமணாவை இனிப்பு வழங்கி வரவேற்ற  அதிமுக, கூட்டணிக் கட்சியினா்.       

Updated On :28 மார்ச் 2026, 2:29 am IST

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளராக பி.வி.ரமணா அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து கூட்டணி கட்சியினருடன் அம்பேத்கா் மற்றும் எம்.ஜி.ஆா். சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 அதிமுகவுக்கும், மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் அதிமுக தலைமை 7 தொகுதிக்கான வேட்பாளா்களை அறிவித்தது. அதில் திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தாா். பின்னா் காந்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவித்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். அதிமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிா்வாகிகளையும் சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டாா். அதிமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் ஆகியோா் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.