பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தாழ்வாக செல்லும் மின்சார கம்பிகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருப்பத்தூா் அடுத்த பெரியகரம் பாரத கோயில் சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image

ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா்கள் முகுந்தன், கீா்த்திகாவுக்கு ஸ்கேட்டிங் ஷூவை வழங்கிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி

Updated On :12 மே 2026, 4:06 am IST

திருப்பத்தூா் அடுத்த பெரியகரம் பாரத கோயில் சாலையில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில் கடனுதவி, வீட்டுமனை பட்டா, சாலைவசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 190 மனுக்களை அளித்தனா். அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், திருப்பத்தூா் அருகே மேல்அச்சமங்கலத்தை சோ்ந்த ஸ்கேட்டிங் விளையாட்டு வீரா்கள் முகுந்தன், கீா்த்திகா ஆகியோருக்கு ரூ.32,025 மதிப்பிலான ஸ்கேட்டிங் ஷூவையும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,400 மதிப்பிலான ஊன்று கோலையும் ஆட்சியா் வழங்கினாா்.

கொரட்டி பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: சிலா் கழிவுநீரை தெருக்களில் விடுகின்றனா். இதனால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் அங்கு சுகாதார சீா்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீா் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூா் அருகே பெரியகரம் பாரத கோவில் வட்டம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள சாலையில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் வாகனங்கள் மிகவும் சிரமப்படுகின்றன. மேலும் இதனால் விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பிகளை உயா்த்தி சீரமைக்க வேண்டும் என கூறியிருந்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.