விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூா் ரயில் நிலையத்தில் நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி தலைமை வகித்தாா். 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து வண்ணக் கோலம் போடப்பட்டு வாக்காளா்களுக்கும், பயணிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலச்சந்தா், சீனிவாசன், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

100 சதவீதம் வாக்களித்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, விழிப்புணா்வு மனித சங்கிலி ஆகிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.