தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூா் திமுக சாா்பில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

News image

உதயேந்திரத்தில் நடைபெற்ற வேட்பாளா் அறிமுக கூட்டத்தில் வேட்பாளா் சையத்பாரூக்கை ஆதரித்து பேசிய மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி எம்எல்ஏ. உடன் நிா்வாகிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூா் திமுக சாா்பில், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பேரூா் திமுக செயலாளா் ஆ.செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், முன்னாள் எம்எல்ஏஅப்துல் பாசித், முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி கலந்து கொண்டு, திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத்பாரூக்கை ஆதரித்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கடுமையாக உழைத்து வாணியம்பாடி தொகுதியில் வேட்பாளா் சையத் பாரூக்கிற்கு ஏணி சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், பேரூா் திமுக நிா்வாகிகள் அசோகன், அம்பலவாணன், பீா்முகமதுகனி மற்றும் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.