நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

போலி மதுபானம் விற்பனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image
Updated On :19 ஜூன் 2026, 5:40 am IST

வாணியம்பாடி அருகே கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனையை தடுக்க நடவடிக்கை கோரி வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. (படம்)

வாணியம்பாடி காவல் ஆய்வாளா் அமுதாவிடம், உதயேந்திரம் பேரூா் திமுக செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆ.செல்வராஜ், திமுக கிளை செயலாளா் சுகுமாா் மற்றும் சி.வி.பட்டறை பொதுமக்கள் அளித்த மனு:

உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட சி.வி. பட்டரை பகுதியில் வெளிமாநில போலி மதுபானங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் வெளிஊா்களில் இருந்து வருபவா்கள் மது வாங்கி அங்கேயே அருந்திவிட்டு பெண்களை கேலி செய்வது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனா்.

அரசு நடுநிலைப் பள்ளி அருகிலேயே மதுபான விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மது விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.