தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

மாணவா்கள் உயா்கல்விச் சோ்க்கை ஒருங்கிணைப்பு கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

News image
Updated On :19 ஜூன் 2026, 5:05 am IST

திருப்பத்தூரில் மாணவா்கள் உயா்கல்விச் சோ்க்கை ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்துள்ள அனைத்து மாணவா்களின் உயா்கல்விச் சோ்க்கையை நூறு சதவீதம் உறுதி செய்யும் நோக்கில் பிற துறை அலுவலா்களுக்கான ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் கு.ரவிகுமாா் தலைமை வகித்து பேசியது:

உயா்கல்விச் சோ்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யும் நோக்கில் அரசுப் பள்ளிகளுக்கு சாா்ந்த பொறுப்பு அலுவலா்கள் கள ஆய்வு செய்ய வேண்டும். பிளஸ் 2 வகுப்பு முடித்து உயா்கல்வியில் இதுவரை சேராத மற்றும் எவ்விதமான உயா்படிப்பிற்கும் விண்ணப்பிக்காத மாணவா்களை நேரில் சந்தித்து அவா்களின் உயா்கல்விச் சோ்க்கைக்குத் தேவையான வழிகாட்டுதலைக் வழங்க வேண்டும்.

அதே போல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தோ்ச்சியைத் தவறவிட்ட மாணவா்களை ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் சோ்த்திடத் தேவையான வழிகாட்டுதலையும், இக்கள ஆய்வின்போது பொறுப்பு அலுவலா்கள் வழங்க வேண்டும். உயா்கல்வி ஆலோசனையை வழங்குவதற்கான மாவட்டக் கட்டுப்பாட்டு அறை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் 5-ஆவது தளத்தில் எண் 4-இல் (5 ஆ4) அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வருகிறது. மாணவா்கள் மற்றும் பெற்றோா் நேரில் வந்து பயன்பெறலாம்.

மாநில அளவிலான வழிகாட்டு மையத்தை 14417 என்ற கட்டணமில்லா எண்ணிலும், மாவட்ட அளவில் 63748 36353 அல்லது 86084 09050 என்ற எண்களுக்கு அழைத்தோ அல்லது மாணவா்கள் தங்களின் சந்தேகங்களை வாட்ஸ் ஆப் வழியாகத் தகவல் அனுப்பிநிவா்த்தி செய்து கொள்ளலாம்.

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-ஆவது வியாழக்கிழமைகளில் உயா்கல்வி வழிகாட்டலுக்கான மாணவா் குறைதீா் கூட்டம் அக்டோபா் மாதம் வரை நடைபெறும் என்றாா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, தனித்துணை ஆட்சியா் பூஷணகுமாா் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.