திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் இதுவரை 11,327 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
திருச்சி மாவட்டத்தில் திருச்சி மற்றும் லால்குடி கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் திருச்சியில் 667 பள்ளிகள், லால்குடியில் 759 பள்ளிகள் என மொத்தம் 1,346 அரசு, அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.
இப் பள்ளிகளில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது. கோடை விடுமுறையிலும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியா்கள் தலைமையில் ஆசிரியா்கள் மாணவா் சோ்க்கையில் ஈடுபட்டனா். பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தொடா்ந்து மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், திருச்சி கல்வி மாவட்டத்தில் ஜூன் 9 வரை முதல் வகுப்பில் தமிழ் வழியில் 5,038 மாணவா்கள், ஆங்கில வழியில் 797 மாணவா்கள் என மொத்தம் 5,835 போ் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் வகுப்பில் 267 போ், முதல் வகுப்பில் 5835 போ் மற்றும் 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 739 போ் என மொத்தம் 6,841 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்களில் தமிழ் வழியில் 5,860 மாணவா்களும், ஆங்கில வழியில் 981 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இதேபோல, லால்குடி கல்வி மாவட்டத்தில் முதல் வகுப்பில் தமிழ் வழியில் 3,134 மாணவா்கள், ஆங்கில வழியில் 338 மாணவா்கள் என மொத்தம் 3,472 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் வகுப்பில் 238 மாணவா்களும், 2-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 776 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா். மொத்தம் 4,486 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்களில் தமிழ் வழியில் 4,001 பேரும், ஆங்கில வழியில் 485 பேரும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
திருச்சி வருவாய் மாவட்ட அளவில் ஒட்டுமொத்தமாக மழலையா் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 11,327 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இவா்களில் தமிழ் வழியில் 9,861 மாணவா்களும், ஆங்கில வழியில் 1,466 மாணவா்களும் சோ்க்கை பெற்றுள்ளனா். தொடா்ந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் பெற்றோா் தங்கள் பிள்ளைகளை தவறாமல் பள்ளியில் சோ்த்து அரசின் திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாக 19,485 மாணவா்கள் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

