நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:35 am IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் வீரதீரச் செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெண்கள் தைரியமான, வீரதீரச் செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், பாலின மேம்பாட்டுக்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்ததற்கு கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான நபா்கள் இணையதளம் மூலம் வரும் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விருதுக்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவா்களின் வீரதீரச் செயல்கள், நிழற்படங்கள், விருதுகள் குறித்த உரிய ஆவணங்கள் கொண்ட கருத்துகளை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் முதல் தளம் பி-பிளாக், மாவட்ட சமூக நல அலுவலகம், திருப்பத்தூா் மாவட்டம் என்ற முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.