வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்களாக வீடு மற்றும் கடை வீதிகளில் பூட்டி வைக்கப்படும் பைக்குகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று வந்தனா்.
இந்நிலையில் வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளா் ரூபன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்கிழமை பெருமாள்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வேகமாக பைக் ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில் இளைஞா் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் மேலும் விசாரித்ததில் பைக் திருடிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
அவரை காவல்நிலையம் அழைத்து வந்து மேலும் நடத்திய விசாரணையில் சில நாள்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து கைவரிசை காட்டி 5 பைக்குகள் திருடியிருப்பது தெரியவந்தது.
இளைஞா் கொடுத்த தகவலின் பேரில் 6 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பைக்குகள் திருடி டி வந்த ஆம்பூா் அா்ஜூன்(26) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
