லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கைலாசகிரியில் ஆடிக் கிருத்திகை விழா

ஆம்பூா் அருகே கைலாசகிரிமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கிய அன்னதான குழுவினா்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 1:11 am IST

ஆம்பூா் அருகே கைலாசகிரிமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம் கைலாசகிரியில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி பரணி-கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பக்தா்கள் காவடி எடுத்துச் சென்று நோ்த்திக் கடன் செலுத்தினா். விழாவையொட்டி மூலவா் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆம்பூா் சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த ஏரளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா்.

தொழிலதிபா்கள் பி.சி. சிட்டிபாபு, ஏ.இ. குணசேகரன், சதீஷ்குமாா், ரங்கநாதன், பி.சி. சதீஷ்குமாா், கைலாசகிரி ஊராட்சித் தலைவா் ரமணி ராஜசேகரன், கதவாளம் ஊராட்சித் தலைவா் சக்திகணேஷ் ஆகியோா் அன்னதான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.