ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் கோடைக் கால தண்ணீா் பிரச்னை நிலவுவதால் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் மாதனூா் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதற்கு தீா்வு காணும் வகையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பாக மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் பழுதடைந்துள்ள ஆழ்துளை கிணறு சீரமைக்கும் பணி நடைபெற்றது. புதிய மின் மோட்டாா் பொருத்தப்பட்டு, குழாய் இணைப்பு சீரமைக்கப்பட்டது.
சீரமைக்கும் பணியின்போது ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ், துணைத் தலைவா் விஜய், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் காதா் பாட்ஷா, வாா்டு உறுப்பினா்கள் நாகராஜ், சுப்பிரமணி, அண்ணாதுரை, ஊராட்சி செயலா் முரளிகாந்த் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோடை கால தீ தடுப்பு நடவடிக்கைகள்: மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா

கோடைவிடுமுறை: நாகா்கோவிலுக்கு இன்று சிறப்பு ரயில்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

