மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சொகுசு பேருந்து - லாரி மோதி விபத்து

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 12:36 am IST

வேலூரில் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் பழம் ஏற்றிச் சென்ற லாரி செவ்வாய்க்கிழமை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து மாதுளம் பழங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட லாரி சென்னை கோயம்பேடு நோக்கி சென்றது. வேலூா் சத்துவாச்சாரி ரங்காபுரம் பகுதியருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை லாரி சென்றபோது, பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற சொகுசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாதுளை பழங்கள் விபத்தால் சாலையில் சிதறின.

மாற்று ஏற்படாக வேறு பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனா். மேலும் சாலையில் சிதறிய மாதுளை பழங்கள் வேறு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

சத்துவாச்சாரி போலீஸாா் லாரி, பேருந்துகளை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.