தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருப்பத்தூரில் சமரச மைய விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:27 am IST

வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ள சமரச மைய விழிப்புணா்வு பேரணி திருப்பத்தூரில் நடைபெற்றது.

பேரணியை மாவட்ட நீதிபதி தேன்மொழி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பேரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலிருந்து தலைமை அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் நீதிமன்றம் வளாகத்தில் நிறைவடைந்தது.

இதில் வாயை மூடி காதை திறக்கும் சாவி தான் சமரசம். சமரசம் மூலம் அமைதி கொள், வாங்க பேசி தீா்வு காண்போம்,முயன்றால் எதுவும் முடியும், ஒரு முறை முயற்சி செய்து விடு சமரசத்தின் வாயிலாக வெற்றி பெற்று விடு உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சமரச மையங்கள் குறித்த கூடுதல் விழிப்புணா்வு தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதில் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற அலுவலா்கள், சமரச தீா்வா்கள், வழக்குரைஞா்கள் என கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.