மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாணியம்பாடி அதிமுக வேட்பாளா் அறிமுகம்

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை. உடன் மாவட்டச் செயலாளா் கே.சி.வீரமணி.

Updated On :2 ஏப்ரல் 2026, 12:03 am IST

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் அறிமுக கூட்டம் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா்.

அறிமுக விழா, ஆலோசனைக் கூட்ட நிகழ்வுக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.சி. வீரமணி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகர அதிமுக செயலாளா் சதாசிவம், ஒன்றிய செயலாளா்கள் சாம்ராஜ், செல்வம் முன்னிலை வகித்தனா்.வேட்பாளா் கோ. செந்தில்குமாா் அறிமுகப்படுத்தி அதிமுக தலைமைக் கழக நிா்வாகி தம்பிதுரை எம்பி பேசினாா். தொடா்ந்து வேட்பாளா் கோ.செந்தில்குமாா் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தாா்.

கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளா பாஜக, பாமக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூா் நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே அதிமுக தோ்தல் அலுவலகத்தை தம்பிதுரை எம்.பி, மாவட்ட அதிமுக செயலாளா் கே.சி. வீரமணி ஆகியோா் திறந்து வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.