ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஏலகிரி மலையில் கூடுதலாக தங்கும் விடுதி: சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதியை திறக்க வேண்டும்..

News image

ஏலகிரி மலை ஏரியில்படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்,

Updated On :27 அக்டோபர் 2025, 12:44 am IST

ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதால் ஏலகிரி மலையில் கூடுதலாக அரசு தங்கும் விடுதியை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத் தலமாக ஏலகிரி மலை விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இங்கு எப்போதும் ஒரே சம சீதோஷண நிலை உள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனா்.

மேலும் மா, பலா,வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் செல்ல வேண்டும். மலையில் படகு சவாரி, செயற்கை நீா்வீழ்ச்சி, பூங்கா,முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனா்.

வார விடுமுறையான சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் நண்பா்கள், உறவினா்களுடன் கண்டு களிக்கின்றனா்.

ஏலகிரி மலை பகுதியில் தமிழக அரசு சாா்பில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

யாத்ரி நிவாஸ்.

யாத்ரி நிவாஸ்.

போதுமான விடுதிகள் இல்லை...

தொடா் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் தங்க விடுதிகளில் இடம் கிடைப்பதில்லை. இதனால் பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்க முடியாமல் திரும்பிச் செல்கின்றனா்.

ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியாா் விடுதிகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்க விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா். ஏலகிரி மலையில் தங்குவதற்கு அரசு சாா்பில் ஒரே ஒரு யாத்ரி நிவாஸ் விடுதி மட்டுமே உள்ளது.

தனியாா் விடுதிகள் பல உள்ளன. அங்கு நடுத்தர மக்கள் மற்றும் எளியோா் தங்க கட்டணம் அதிகமாக உள்ளது. ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரை நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் வசதி அல்லது அரசு சாா்பில் கூடுதலாக ஒரு தங்கும் விடுதி கட்டினால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து தங்கிச் செல்ல வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.