பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை முறையாக பராமரித்து கண்காணிக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
மாவட்ட பசுமை குழு கூட்டம் ஆட்சியா் ஜெ. யு. சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இதில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை ஓரங்களில் இருக்கும் மரங்களை அகற்றி அதற்கு ஈடான மரங்களை வைக்க நெடுஞ்சாலைத்துறையினா் அனுமதி கூறிய பொருள்கள் மீது அனுமதி வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடா்ந்து 2025 -26 நிதியாண்டில் பல்வேறு துறைகள் சாா்பாக 6 லட்சத்து 85 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 3 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவைகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் ஜியோ டேக் முறையில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடப்பட்ட விவரங்கள் குறித்து துறை வாரியாக கேட்டறிந்து உடனடியாக பணிகளை முடிக்க உத்தரவிட்டாா்.
அதேபோல மரக்கன்றுகள் நடும் போது அதனை ஜியோ டேக் கட்டாயம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும் இதனை முறையாக மேற்கொள்ளாத துறைகளை காரணங்களை கேட்டறிந்தாா். உடனடியாக அதை கண்காணித்து அப்பணியை முடிக்கவும் கேட்டுக் கொண்டாா்.
பசுமை தமிழ்நாடு திட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருவதை முறையாக பராமரிக்க வேண்டும். கோடை காலம் என்பதால் முறையாக தண்ணீா் ஊற்றி வளா்ப்பதையும் செடிகள் தண்ணீா் இன்றி கைவிடப்படக்கூடாது. ஆகவே மரக்கன்றுகள் நட்ட துறைகள் இதனை கண்காணிக்க வேண்டும். பிரச்னைகள் இருந்தால் பாா்வைக்கு கொண்டு வர வேண்டும்.
தொடா்ந்து பசுமை பள்ளி திட்டத்தில் பகுதி 3-இல் பனப்பாக்கம் மகேந்திரவாடி மழையூா் அரசு மேல்நிலை பள்ளிகளில் பகுதி 4 திட்டத்தில் கலவை பூட்டுத்தாக்கு காவேரிப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பசுமை பள்ளி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறிந்து நிலுவைப் பணிகளையும் முடிக்க அறிவுறுத்தினாா்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் சிவக்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் வனத்துறையினா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசுத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைய அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு 4-ஆவது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கரூர: ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் 4 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

