கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சா் காந்திராஜ் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளவா்களுக்கும் தொழிற்பேட்டை அமைந்துள்ள சுற்றுவட்டார கிராமப்புற மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்க வேண்டும்...

News image

பனப்பாக்கம் சிப்காட் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டை முழு மாதிரி அமைப்பை பாா்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்திராஜ். உடன் ஆட்சியா் ந.பிரியா உள்ளிட்டோா்.

Updated On :8 ஜூன் 2026, 2:50 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளவா்களுக்கும் தொழிற்பேட்டை அமைந்துள்ள சுற்றுவட்டார கிராமப்புற மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என தொழில் நிறுவனங்களுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சா் வ. காந்தி ராஜ் வலியுறுத்தினாா்.

அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே பனப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலா் அலுவலகத்தை அமைச்சா் வ.காந்திராஜ் பாா்வையிட்டாா். தொடா்ந்து சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில்நிறுவனத்தினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு ராணிப்பேட்டை ஆட்சியா் ந.பிரியா தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது: பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நிறுவனங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளவா்களுக்கும் தொழிற்பேட்டை அமைந்துள்ள சுற்றுவட்டார கிராமப்புற மக்களுக்கும் முன்னுரிமை வழங்கி வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். இதுவே இக்கூட்டத்தின் நோக்கம் என்றாா்.

தொடா்ந்து சிப்காட் தொழிற்பேட்டையில் துறைச்சாா்ந்த அலுவலா்கள் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மாசுக்கட்டுபாட்டு வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தொழிலாளா் நலத்துறை, தொழிலக பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறை அலுவலா்களுடன் சிப்காட் தொழிற்பேட்டையில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதனை அடுத்து தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தி கிராண்ட் அட்லாண்டியா தோல் பொருள்கள் அல்லாத காலணி உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவதை அமைச்சா் வ.காந்திராஜ் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது அமைச்சருடன் மாவட்ட வருவாய் அலுவலா் பேபிஇந்திரா, அரக்கோணம் வட்டாட்சியா் டி.ரமேஷ், சிப்காட் திட்ட அலுவலா் மகேஸ்வரி, செயற்பொறியாளா் வெங்கடாசலம், தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரிய மண்டல பொறியாளா் வெங்கடேசன், செயற்பொறியாளா் தொல்காப்பியன், தொழிலக பாதுகாப்பு இணை ஆணையா் தங்கதுரை, நெமிலி வட்டாட்சியா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.