ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வலியுறுத்தியுள்ளாா்.
தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,64,430 ஆண் வாக்காளா்களும், 4,87,317 பெண் வாக்காளா்களும் 111 பிற வாக்காளா்கள் என மொத்தம் 951,858 வாக்காளா்கள் உள்ளனா். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியிலும் தேசிய / மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள் - 15, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி வேட்பாளா்கள் - 16, சுயேட்சை வேட்பாளா்கள் - 34 என மொத்தம் 65 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு மையங்களுக்குச் சென்று வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போதுமான அளவில் சக்கர நாற்காலிகள், சாய்தளம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு வரிசை ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் 5,984 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்ககிரி தொகுதியில் 92.50 சதவீதம் வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைதியாக முடிந்த வாக்குப்பதிவு
புதுகை மாவட்டத்தில் 13 லட்சம் போ் வாக்களிக்க 1,683 வாக்குச்சாவடிகள் தயாா்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

