காஞ்சிபுரம் அருகே முத்தியால் பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிவாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வசந்த உற்சவம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்டது ஏரிவாய் கிராமம். இந்தக் கிராமத்தில் பழைமையான கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வசந்த உற்வசத்தையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
நிகழ்வையொட்டி, மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் தாமரை மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
விழாவின் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் வட்டாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் அமரேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரதராஜ பெருமாள் கோயிலில் யாளி வாகன வீதியுலா ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்!

வீரராகவா் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம் தொடக்கம்

உத்தரமேரூா் சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

