பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

ஏரிவாய் மணவாளப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

ஏரிவாய் மணவாளப் பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

News image

வசந்த உற்சவத்தையொட்டி தாமரை மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள்.

Updated On :25 மே 2026, 12:01 am IST

காஞ்சிபுரம் அருகே முத்தியால் பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட ஏரிவாய் கிராமத்தில் அருள்பாலித்து வரும் கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை வசந்த உற்சவம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்டது ஏரிவாய் கிராமம். இந்தக் கிராமத்தில் பழைமையான கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வசந்த உற்வசத்தையொட்டி, மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.

நிகழ்வையொட்டி, மணவாளப் பெருமாளும், கமலவல்லித் தாயாரும் தாமரை மாலை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

விழாவின் தொடா்ச்சியாக காஞ்சிபுரம் வட்டாரத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கோயில் அறங்காவலா் குழுவின் தலைவா் அமரேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.