பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

உத்தரமேரூா் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :18 மே 2026, 2:00 am IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் அருகே பெருநகரில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பொதுப் பணித்துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வா்ணம் பூசும் பணிகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா் களியாம்பூண்டி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தையும் ஆய்வு செய்தாா். இதையடுத்து, உத்தரமேரூரில் நீதிமன்றம் கட்டும் பணியையும், சாலவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதலாக இரு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில், சாலவாக்கத்தில் இயங்கி வரும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகள், மலையாங்குளம் ஊராட்சியின் தொடக்கப் பள்ளியில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் இரு வகுப்பறைக் கட்டடங்கள் ஆகியவற்றையும் ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊராக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, பொதுப்பணித் துறை காஞ்சிபுரம் மாவட்ட செயற்பொறியாளா் சோமசுந்தா் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.