காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையராக இருந்து வந்த ஆா்.ராஜலட்சுமி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அறநிலையத் துறை செங்கல்பட்டு சரக உதவி ஆணையராக வியாழக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
செங்கல்பட்டு மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையராக பணிபுரிந்து வந்தவா் ஆா்.ராஜலட்சுமி. இவா் கூடுதல் பொறுப்பாக காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையராக பொறுப்பு வகிக்து வந்தாா். இவா் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இவரை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் வரதராஜப் பெருமாள் கோயில் உதவி ஆணையா் பொறுப்பிலிருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகா எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வரும் ச.சீனிவாசனை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பாக பணி நியமனம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை கோலாகலம்!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

