பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காஞ்சிபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீா்க்கும் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் தி.சினேகா தலைமையில் சிறப்பு குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (பொறுப்பு)பாலகிருஷ்ணன்,பயிற்சி சாா் ஆட்சியா் அமன் திவாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி வரவேற்று பேசினாா்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது பாதுகாவலருடன் கலந்து கொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்,3 சக்கர வாகனம்,வீட்டு மனைப்பட்டா, காதொலிக்கருவி, திறன் பேசிகள்,மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்,தொழில் நுட்பக் கடனுதவிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினாா்.

மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா் தகுந்த வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குமாறு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழியை கேட்டுக் கொண்டாா். இக்கூட்டத்தில் அரசு அலுவலா்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களது பாதுகாவலா்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.