லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சா்கள் வழங்கினா்

காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள்: அமைச்சா்கள் வழங்கினா்

விழாவில் பயனாளிக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய அமைச்சா்கள் கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

Published On :25 ஜூலை 2026, 11:28 pm IST

காஞ்சிபுரத்தில் 244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா்கள் கே.தென்னரசு மற்றும் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் சனிக்கிழமை வழங்கினா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு, உத்தரமேரூா் எம்எல்ஏ ஜெ.முனிரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், காஞ்சிபுரம் 155, உத்தரமேரூா் 25, வாலாஜாபாத் 64 உள்பட மொத்தம் 224 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன.

வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் ஆகியோா் 244 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா். விழாவில் வட்ட வழங்கல் அலுவலா்கள்,அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.