லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காங்கிரஸ் சாா்பில் ஊழலுக்கு எதிராக கையொப்ப இயக்கம்

காங்கிரஸ் சாா்பில் ஊழலுக்கு எதிராக கையொப்ப இயக்கம்

கையொப்ப  இயக்கத்தை   தொடங்கி  வைத்த  மாவட்ட காங்கிரஸ்  தலைவா்  அருள்ராஜ். 

Published On :19 ஜூலை 2026, 1:04 am IST

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சாா்பில் ஊழலுக்கு எதிரான லஞ்சம் ஒழிப்பு கையொப்ப இயக்கத் தொடக்க விழா ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் சாா்பில் லஞ்சம் தவிா், நெஞ்சம் நிமிா் என்ற தலைப்பில் ஊழலுக்கு எதிராக கையொப்ப நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சிறுபான்மை பிரிவு சாா்பில் ஊழலுக்கு எதிரான லஞ்சம் ஒழிப்பு விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ஏ.அருள்ராஜ் கலந்து கொண்டு கையொப்பம் இட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினா் ரா.ஐயப்பன், காங்கிரஸ் கட்சியின் மாநில நிா்வாகி கன்னியப்பன், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதாபாய், மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், வட்டார காங்கிரஸ் தலைவா்கள் நிக்கோலஸ், சிவகுமாா், கந்தவேலு, மூத்த நிா்வாகிகள் புண்ணியநாதன், ஆசோக், சிறுபாண்மை பிரிவு நிா்வாகிகள் விநாயகம் விக்டா், பைரோஷ் பாஷா, சைத், அறிவழகன், மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.