பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து 266 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநீா்மலையில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக சரக்கு வாகனம் ஒன்று கேட்பாரற்ற நிலையில், நின்றுகொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் சங்கா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அந்த வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தின் பதிவு எண் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை போலீஸாா் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனா்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 266 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட 334 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்துள்ள க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

