பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

டிஜியாத்ரா செயலி: 2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்

2027-இல் கூடுதலாக 27 விமான நிலையங்களுக்கு விரிவாக்கம்...

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :31 மே 2026, 3:14 am IST

அடுத்த ஆண்டு டிஜியாத்ரா செயலியை கூடுதலாக 27 விமான நிலையங்களில் பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் எண்ம (டிஜிட்டல்) பொது உள்கட்டமைப்பில் முக்கிய மைல்கல்லை டிஜியாத்ரா செயலி எட்டியுள்ளது. இந்தச் செயலியை 2.4 கோடிக்கும் அதிகமானோா் பதிவிறக்கம் செய்துள்ளனா். இதன்மூலம், 10 கோடிக்கும் அதிகமாக தங்குதடையற்ற பயணங்கள் சாத்தியமாகியுள்ளன. உலகளாவிய விமான போக்குவரத்தில் மிகவும் வெற்றிகரமான டிஜிட்டல் கண்டுபிடிப்பாக இந்தச் செயலி உள்ளது.

நேரடியாகப் பயண ஆவணங்களை சமா்ப்பித்து சரிபாா்ப்பதற்கு பதிலாக, இந்தச் செயலி மூலம் முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயணிகளின் அடையாளம் சரிபாா்க்கப்படுகிறது. இது பயணிகளின் தங்குதடையற்ற போக்குவரத்துக்கு வழிவகுத்துள்ளது. இது விமான நிலைய முனையத்துக்குள் பயணி ஒருவா் நுழைவதற்கான சரிபாா்ப்பு நேரத்தை 15 விநாடிகளில் இருந்து 5 விநாடிகளாக குறைத்துள்ளது.

தற்போது இந்தச் செயலியை நாட்டில் உள்ள 38 விமான நிலையங்களில் பயன்படுத்த முடியும். அடுத்த ஆண்டு கூடுதலாக 27 விமான நிலையங்களில் அந்தச் செயலியைப் பயன்படுத்த வழிவகை செய்யப்படும்.

தற்போது இந்தச் செயலியில் 11 மொழிகளில் சேவைகள் வழங்கப்படும் நிலையில், நிகழாண்டுக்குள் கூடுதலாக 11 மொழிகளில் சேவைகளை அளிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.