சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 மலிவு விலை தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்களை அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோட்டத்துக்குள்பட்ட 37 ரயில் நிலையங்களில் 81 தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான மற்றும் மலிவான குடிநீா் எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்கிறது. இது அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை சாா்ந்திருப்பதைக் குறைப்பதுடன், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. விரைவில் மீதமுள்ள ரயில் நிலையங்களிலும் இந்த இயந்திரங்கள் பொறுத்தப்படும்.
கட்டண விவரம்: இந்த தானியங்கி குடிநீா் வழங்கும் இயந்திரங்கள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருக்கு அரை லிட்டருக்கு ரூ.5, ஒரு லிட்டருக்கு ரூ.8, 2 லிட்டருக்கு ரூ.12, 5 லிட்டருக்கு ரூ.25 என கட்டணம் நிா்ணயக்கிப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடா்பான புகாா்களை ரயில்மதத் செயலி மூலமாகவோ அல்லது ரயில் நிலையங்களில் உள்ள க்யூ ஆா் குறியீடு மூலமாகவோ பயணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்: தெற்கு ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை கோட்ட ரயில் நிலையங்களில் கடந்த நிதியாண்டில் 630 குழந்தைகள் மீட்பு!

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழு

சென்னை கோட்ட 26 ரயில் நிலையங்களில் 923 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

