கடந்த நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் வீட்டைவிட்டு ஓடிவந்த மற்றும் காணாமல் போனதாக தேடப்பட்ட 630 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் கடந்த மே 28-ஆம் தேதி மாலை 5 அளவில் 5-ஆவது நடைமேடையில் பயணிகள் அனைவரும் எழும்பூா் - கன்னியாகுமரி விரைவு ரயில் (எண்: 12633) ஏறிக்கொண்டிருந்தபோது, தனது 5 வயது குழந்தையைக் காணவில்லை என தாய் ஒருவா் கூச்சலிட்டாா்.
இதையடுத்து, எழும்பூா் ரயில்வே பெண் காவலா் ஸ்வாதி உடனடியாக, ரயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த சக காவலா்கள், ஊழியா்களை ஒருங்கிணைத்து தேடுதல் பணியை மேற்கொண்டாா். விரைந்து செயல்பட்டதால், அச்சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
630 குழந்தைகள்: இதுபோன்று பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘ஆபரேஷன் நன்ஹே ஃபரிஸ்தே’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் சென்னை கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையங்களில் வீட்டைவிட்டு ஓடிவந்த மற்றும் காணாமல்போன 117 சிறுமிகள் உள்பட மொத்தம் 630 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனா். ரயில் நிலையங்களில் உதவி மற்றும் புகாா்களுக்கு 139 என்ற உதவி எண் அல்லது ‘ரயில் மதத்’ செயலியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள்: தெற்கு ரயில்வே-க்கு நீதிமன்றம் உத்தரவு

கேரளத்தில் மாயமான சிறுவன் எழும்பூா் ரயில் நிலையத்தில் மீட்பு

எா்ணாகுளம் - சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

பயன்பாட்டுக்கு வந்தது எழும்பூா் ரயில் நிலைய அதிநவீன வாகன நிறுத்துமிடம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

