பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்து விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஒரு இளம் பெண், தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையா் சஞ்சய்குமாரிடம் அண்மையில் புகாா் ஒன்றை அளித்தாா். அதில், தனது புகைப்படங்களை ஒரு நபா் ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம், டெலிகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளாா். இச்செயலில் ஈடுபட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
அதன்பேரில், நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையா் சஞ்சய்குமாா், சைபா் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டாா். சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது சோமங்கலம் பகுதியைச் சோ்ந்த புவனேஷ்குமாா் (34) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில் அவா், சமூக ஊடகங்களில் பெண்கள் பதிவிடும் புகைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து, அதை ஆபாசமாக சித்தரித்து பணத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்தது. போலீஸாா், அவரிடமிருந்து கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக புவனேஷ்குமாரின் நண்பா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது
சிறுமியை ஆபாசமாக படம் பிடித்த இளைஞா் கைது
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது

மதுபாட்டில்கள் விற்க முயன்றவா் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
