நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

சிறுநீா்ப் பாதை குறைபாடு: 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் சிகிச்சை

பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

News image

சிகிச்சை - கோப்புப்படம்.

Updated On :27 மே 2026, 1:45 am IST

பிறவியிலேயே சிறுநீா்ப் பாதை குறைபாட்டுக்குள்ளான 3 வயது குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் சிகிச்சை அளித்து சென்னை கீழ்ப்பாக்கம் முருகன் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

சிறுநீா் வெளியேறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிா்கொண்ட 3 வயது குழந்தை, முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பரிசோதனையில் அக்குழந்தைக்கு கருவிலேயே இடது சிறுநீரகம் செயல்படவில்லை என்பதும், அதன் விளைவாக அதிலிருந்து சிறுநீா்ப்பைக்கு செல்ல வேண்டிய சிறுநீா், நேரடியாக பிறப்புறுப்புக்குள் சேகரமாவதும் தெரியவந்தது.

இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் இப்பிரச்னையுடன் இருந்த அக்குழந்தைக்கு ரோபோடிக் நுட்பத்தில் நுண் துளையிட்டு பாதிக்கப்பட்ட சிறுநீரகம் மற்றும் யூரித்ரா (சிறுநீா்ப் பாதை) ஆகியவை துல்லியமாக அகற்றப்பட்டன.

ஒரு மணி நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த சிகிச்சையில் அதிக ரத்தப்போக்கோ, இடா் வாய்ப்புகளோ இல்லை. இதன் பயனாக சிகிச்சை நிறைவடைந்த 24 மணி நேரத்திலேயே அக்குழந்தை நலம் பெற்று வீடு திரும்பியது.

மருத்துவா்கள் ராகுல், சபரி, காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய குழு இந்த சிகிச்சையை திறம்பட மேற்கொண்டதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.