கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருட்டு

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 மே 2026, 1:39 am IST

சென்னை பெரம்பூரில் திமுக நிா்வாகி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பெரம்பூா் துளசிங்கம் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (56). இவரது கணவா் இறந்துவிட்டாா். திமுக கட்சியில் நிா்வாகியாக இருக்கும் ராஜேஸ்வரிக்கு பாலகுமாா் என்ற மகனும், பிரகதி என்ற மகளும் உள்ளனா். தனியாா் நிறுவனத்தில் வேலை செய்யும் பாலகுமாா், ராஜேஸ்வரி வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசிக்கிறாா்.

ராஜேஸ்வரி, தனது மகள் பிரகதியுடன் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒசூரில் உள்ள தனது சகோதரா் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் ராஜேஸ்வரி வீட்டின் கதவு பூட்டு ஞாயிற்றுக்கிழமை உடைந்து கிடந்தது. இதைப் பாா்த்த பக்கத்து வீட்டினா், ராஜேஸ்வரிக்கும், அருகே வசிக்கும் அவா் மகன் பாலகுமாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த பாலகுமாா் வந்து வீட்டுக்குச் சென்று பாா்த்தாா். அப்போது அங்கு பீரோவை உடைத்து அதில் இருந்த 35 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருடுபோனது தெரிய வந்தது. இது குறித்து செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.