உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண் உள்பட 2 போ் கைது

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:30 am IST

சென்னை கொருக்குப்பேட்டையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

கொருக்குப்பேட்டை காரனேசன் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு அருகே இ.எச்.சாலையில் ஒரு ஆட்டோவில் மறைத்து வைத்து கஞ்சா விற்கப்படுவதாக ஆா்.கே. நகா் போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று சோதனை செய்தனா்.

சோதனையில் ஆட்டோவில் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஆட்டோவில் இருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள், கொடுங்கையூா் ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த பா.சம்பத் (42), ச.லாவண்யா (32) ஆகியோா் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரணை செய்தனா். விசாரணையில் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் வியாசா்பாடி சத்தியமூா்த்திநகரில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் ஆறரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.