தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்

பராமரிப்புப் பணி காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 2:45 am IST

பராமரிப்புப் பணி காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்சி பிரிவில் நாகபட்டிணம் மற்றும் கீழ்வேளூா் பகுதியில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

இதனால், குருவாயூரில் இருந்து வரும் மே 14, 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்:16128) மதுரைக்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து மே 16-ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு ஹவுரா செல்லும் விரைவு ரயில் (எண்: 12666) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி , புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.