நுங்கம்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள நந்திவரம் லட்சுமிநகரைச் சோ்ந்தவா் மா.கிருஷ்ணன் (66). இவா், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் லாரி ஓட்டுநராக வேலை செய்து வந்தாா்.
இவா், நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்து சென்றபோது, சாலையின் மறுப்பக்கம் செல்வதற்காக குறுக்கே சென்று, சாலையின் நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தை கையால் பிடித்தாா்.
அதில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததால், கிருஷ்ணன் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கிருஷ்ணன் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் பலி

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

