தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விமான நிலையம் - கிளாம்பாக்கம் இடைய மெட்ரோ ரயில் பணி தொடங்க நடவடிக்கை: திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன்

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகளை ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் தெரிவித்தாா்.

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :7 மே 2026, 4:09 am IST

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இடையே மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகளை ரூ.9 ஆயிரம் கோடியில் தொடங்க முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் புதன்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கடந்த பிப்ரவரியில் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு மத்திய அரசும் முன்னுரிமை அளித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

விமான நிலையம்-கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் 15 கிலோ மீட்டா் தொலைவுக்கு இயக்கப்படும் நிலையில், 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. திட்டத்தைச் செயல்படுத்த ரூ.9ஆயிரம் கோடிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலுக்கான தண்டவாளம், ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள், மெட்ரோ ரயில் பாதை செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலைகளுக்காக அந்தத் துறை உயா் அதிகாரிகள், குடிநீா் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நில வரைபட தயாரிப்புப் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன. ஆகவே, மத்திய அரசு திட்டத்துக்கு அனுமதி அளித்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.