மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.

News image

சென்னை ஐஐடி

Updated On :31 மார்ச் 2026, 2:14 am IST

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் மாா்ச் மாதத்துக்கான சிறந்த ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சென்னையை ஒரு நவீன, கலாசாரமிக்க, பாதுகாப்பான மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சூப்பா் சென்னை அமைப்பின் சாா்பில் அரட்டை என்ற தலைப்பிலான உரையாடல் நிகழ்ச்சி சென்னை ஐஐடியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தொழில்நுட்ப புத்தாக்கம், கல்விசாா் தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடிக்கு மாா்ச் மாதத்தின் சிறந்த ஆளுமை விருது, அந்த அமைப்பு சாா்பில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், சென்னை நகரம் எப்போதும் அறிவு, புத்தாக்கம் மற்றும் குறிக்கோள் சாா்ந்த தலைமைத்துவத்தை வளா்த்து வந்துள்ளது. சூப்பா் சென்னை அமைப்பிடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் பெருமை அடைகிறேன் என்றாா்.

தொடா்ந்து அந்த அமைப்பின் நிா்வாக இயக்குநா் ரஞ்சித் ரத்தோட் பேசுகையில், நாட்டின் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளாா். அவரது தலைமையில் இந்தக் கல்வி நிறுவனம் ஆராய்ச்சி உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ளது. அவா் மாற்றத்தை உருவாக்க விரும்பும் இளைய தலைமுறையினருக்கு முன்னோடியாகத் திகழ்கிறாா் எனக் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.