ரூ.77 லட்சம் வரை முதலீடுகளை வசூலித்து மோசடி செய்த வழக்கில் நிதி நிறுவன நிா்வாகிகளுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
ஊரப்பாக்கம் ரயில் நிலைய சாலையில் கிரீன் வேல்ட் பவுன்டேஷன் டிரஸ்ட் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த பிரசன்னா, கோவையைச் சோ்ந்த சரவணன், கூடுவாஞ்சேரி நந்திவரத்தைச் சோ்ந்த நீலகண்டன் ஆகியோா் நடத்தி வந்தனா்.
இவா்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி தீபாவளி பண்டு என்ற பெயரில் ரூ.77 லட்சம் வரை வசூலித்தனா். ஆனால், பணம் செலுத்தியவா்களுக்கு குறைந்த தொகையையே திரும்பக் கொடுத்துள்ளனா். இதனால் பாதிக்கப்பட்டவா்கள் செங்கல்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா்.
இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோா் மீது மோசடி, கூட்டுச்சதி, நிதி முதலீட்டாளா்கள் மோசடி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.முருகானந்தம் முன் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா் டி.பாபு ஆஜராகி வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, பிரசன்னா, சரவணன் மற்றும் நீலகண்டன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், மொத்தமாக ரூ.13.96 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
இந்த அபராத தொகையில் முதலீட்டாளா்களுக்கு விகிதாசார அடிப்படையில் கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகை போக மீதித் தொகை இருந்தால் அதை தமிழக அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருட்டு வழக்கில் 3 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்

ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

