ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி வீரா்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் சிஎஸ்கே அணி நிா்வாகம் மற்றும் காவேரி மருத்துவமனை இடையே கையொப்பமானது.
இதற்கான நிகழ்ச்சி சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிஎஸ்கே அணி தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், காவேரி மருத்துவக் குழுமத்தின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் பொன்னுசாமி, தலைமை மருத்துவா் சிவராம் கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் வீரா்களின் உடற்தகுதியை உறுதி செய்யும் நடவடிக்கைகள், போட்டியின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கும் நடவடிக்கைகளில் காவேரி மருத்துவமனையின் விளையாட்டு மருத்துவத் துறை இணைந்து செயாற்ற உள்ளது.
அனுபவம் வாய்ந்த அவசர சிகிச்சை மருத்துவா்கள், விளையாட்டு மருத்துவ நிபுணா்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், கதிரியக்க வல்லுநா்களை உள்ளடக்கிய குழு தங்களிடம் உள்ளதாக காவேரி மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உரத்துடன் துணை பொருட்களை சோ்த்து விற்கக்கூடாது: வேளாண் அதிகாரி

சிட்டி யூனியன் வங்கிக்கு புதிய நிா்வாக இயக்குநா்

அகா்வால்ஸ் மருத்துவா்களுக்கு சா்வதேச விருது

இளம் விளையாட்டு வீரா்களுக்கு சிஎஸ்கே ஆதரவு தொடரும்: ரூபா குருநாத்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

