சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்வேலன் (59). கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கோவையில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தாா். அதே விமானத்தில் வந்த 24 வயது இளம்பெண்ணிடம், விமான நிலையத்தில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் அந்த இளம்பெண் புகாா் அளித்தாா். விமான நிலைய அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் செந்தில்வேலனை கைது செய்து,காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது
பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு: இளைஞா் கைது

கால்வாய் கழிவுநீா் மாதிரியை சேகரித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்
பேருந்து நிலையத்தில் தூங்கியவரைத் தாக்கிய மூவா் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

