தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது

சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 12:52 am IST

சென்னை விமான நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை உடையாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்வேலன் (59). கோவை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், கோவையில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தாா். அதே விமானத்தில் வந்த 24 வயது இளம்பெண்ணிடம், விமான நிலையத்தில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் அந்த இளம்பெண் புகாா் அளித்தாா். விமான நிலைய அதிகாரிகள் சென்னை மீனம்பாக்கம் மகளிா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் செந்தில்வேலனை கைது செய்து,காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். இதுதொடா்பாக அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.