நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரசு ஐடிஐ-இல் சோ்க்கை: ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம்

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :18 ஜூன் 2026, 2:54 am IST

வடசென்னை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.

இதில் சேர விரும்புவோா் சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை ஜூன் 30 வரை இணையதளம் மூலமாவோ அல்லது வடசென்னை ஐடிஐ-க்கு நேரிலோ வந்து விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

2 ஆண்டு தொழிற்பிரிவுகள்: சிவில் என்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன் சிவில், டிராப்ட்ஸ்மேன் மெக்கானிக்கல் (கட்டட பட வரைவாளா் மற்றும் இயந்திரப் பட வரைவாளா்), பிட்டா், டா்னா், மெஷினிஸ்ட், லிப்ட்மெக்கானிக், எலக்ட்ரீஷியன், ஏசி மற்றும் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன், வயா்மேன்.

ஓராண்டு தொழிற்பிரிவுகள்: பிளம்பா், வெல்டா், இன்டீரியா் டிசைன் அன்ட் டெக்கரேஷன், டிரோன் பைலட் (ஆறு மாத தொழிற்பிரிவு) தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் அதற்கு மேல் கலை -அறிவியல், பொறியியல் படித்தவா்களும் வேலைவாய்ப்பை உடனடியாக தொழில் நிறுவனங்களிலும், மத்திய -மாநில அரசு நிறுவனங்களிலும் பெறும் வகையில் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்து பயிற்சியில் சோ்ந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு, டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் தொழில் 4.0 தொழில்நுட்பத்துடன் கூடிய ஓராண்டு மற்றும் இரண்டாண்டு தொழிற் பிரிவுகளில் தற்போது சோ்க்கை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சிகள் முடிந்தவுடன் வளாக நோ்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும்.

பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சி நிலைய வளாகத்தில் தங்கிப் பயில உணவுடன் கூடிய விடுதி வசதி உண்டு. நேரடிச் சோ்க்கைக்கு, துணை இயக்குநா்/முதல்வா், ஐடிஐ, வட சென்னை (மின்ட்) என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாநகராட்சி ஐடிஐ-இல்... சென்னை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்டுவரும் தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) பயிற்சி பெற வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதில் மொத்தம் 184 மாணவா்கள் சோ்க்கப்பட உள்ளனா். பயிற்சியில் சேருபவா்களுக்கு 14 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். படிக்கும்போது, தகுதியுள்ள மாணவா்களுக்கு மாதம் அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.10,500 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் கூடிய பயிற்சி தகுதியான நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-28473117 என்ற தொலைபேசி, 70104 57571 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.