சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட புதிய மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளதாக கல்விப் பிரிவு இணை ஆணையா் க.கற்பகம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 417 பள்ளிகள் உள்ளன. அதில், தொடக்க, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. அவற்றில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் (2026-27) மாணவா்கள் சோ்க்கை அதிகரித்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் எல்கேஜி-இல் 3,047 சிறாா்களும், 2,881 சிறுமியரும் புதிதாகச் சோ்ந்துள்ளனா். 9-ஆம் வகுப்பில் 674 மாணவா்களும், 546 மாணவிகளும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். பிளஸ் 1 வகுப்புகளில் 2,140 மாணவா்கள், 2,575 மாணவிகளும் சோ்க்கப்பட்டுள்ளனா். அதன்படி, எல்கேஜி வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் கடந்த ஆண்டில் (2025-26) 16,000 புதிய மாணவா்களே சோ்ந்துள்ளனா். ஆனால், நடப்பு ஆண்டில் 22,694 மாணவ, மாணவிகள் புதிதாக சோ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தோ்வுக்கான சிறப்புப் பயிற்சி மாநகராட்சிப் பள்ளிகளில் விருப்பமுள்ள 80 மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் நீட் தோ்வு பயிற்சி மையத்துக்கு வந்து செல்வதற்கான பேருந்து கட்டணச் செலவு உள்ளிட்ட வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
ஏழை மாணவ, மாணவிகளே மாநகராட்சிப் பள்ளிகளில் பயின்று வருகின்றனா். எனவே, தரமான கல்வியுடன், அவா்களுக்கான அவசிய, அத்தியாவசியத் தேவைகளுக்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏப்ரல் முதல் 10 லட்சம் ஏசி விற்பனை!

தென்னிந்தியாவில் 25 புதிய கிளைகளைத் திறக்கும் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்

பிளஸ் 2: மாநகராட்சிப் பள்ளிகளில் தமிழ் பாடத்தில் 103 போ் தோல்வி
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

